Posts

பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.

Image
  பாகம் 133     அகிலத்தின் அன்பனென அருளாளன் பெயருற்று அறம் மாறா ஏழ்முனிக்குள் அவனொரு ஞானியுமாய் முடி துறந்த அரசனவன் முற்றுணர்ந்த முனிவனுமாய் அரம்பையுடன் அன்றிணைந்து அழகுடை பூமழலை அலரக் காரணமாய் மாகவிஞன் காவியத்தில் மறதியுறம் சாபமுற்ற நீள் கூந்தல் நேரிழைக்கு நெறிபிறழா தாதையவன் முன் வந்த முதுகுத்தண்டுவடம் சிதைந்த முடவனொருவன் முறை தவறி காமன் கண்ணாயிரம் கரமோங்கும் உலகுறைய உடன்பட்டும் உள்ளுறைய விடாது உம்பர்கோன் மறுத்ததனால்  ஆரம்பையருலகமொன்றை அவனுக்காய் அமைத்ததொரு பிரமமுனியை பெயர் சொலாது நீயறிவாய் ! அம்மாமுனிவன் அருமகள் மறவன் குலம் தோன்றி மாலனுறங்கும் மண்டபம் மேற்கே மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும்  கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர  அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் ...

பாகம்130, 131 & 132 ஐயனுதித்த ஆதிசிவனொளி பதிந்த அருளில்லத் திருவாயிற்படிக்கு தெரியும் கிழக்கே தீங்கிழைக்கா எம்மானுறவு அம்மான் முறை வரும் அறவோன் ஒருவனின் பொழிற்பொதி புத்தன் வீட்டு முற்றமுறைந்த பத்தடி கேணியுள் பாரில் பிறந்தே அறுமதி கடந்த இளம் மறி மழலை அவனுடன் வந்து மறுகடக்க அறியாததன் கால் இடறி கண் முன் வீழ்ந்து நீரில் மிதக்க நெஞ்சம் பதைக்க கருணைக் கடலாம் கனிவின் பெருமான் தன்றுயர் நோக்கா தக்க பொழுதிற் ஈரேழகவையுள் நீருள் பாய்ந்து ஈரநெஞ்சோடணைத்து ஆட்டை மீட்டு ஆருயிர் காத்த அரும்பெருஞ்செயலை அனைவரும் போற்ற ஆகாயம் வந்து அமரர் அரம்பையருடன் அடியேனும் வாழ்த்த சேதாரம் இல்லா செவ்வேள் பண்பினை ஆதாரமோடும் அவனடிதொழுது ஆதாயம் இன்றி அருள்வாக்காய் உரைத்தேன்.

Image
பாகம்130   அம்பாள் துணை இருக்க ஆதி சிவனுடனிருக்க அருட்பண்பன்‌ கிடைத்தானே பரம்பொருளே. அண்டமெலாம் பெரும்பேறு பெற்றதற்கு அலகிலா நன்றி சொல்வேன் பரம்பொருளே. வெண்டலையான் அருளாலே கொண்ட துயர் விலகிடவே வந்த வரம் இவனெனவே வையகத்தை உணர வைத்தாய் பரம்பொருளே. பகுத்தறிவு பூமலர பயனுடை விதையூன்றி புகுத்திடும் அவன் நெறியை புடம்போட்டு சொல்லிடவா ! பூமான் புகழ் மணக்க புறமுரைத்து  புண்ணியம் கோடி யான் ஈட்டிடவா ! அறம்பாடி இவன் வாழ்த்தி அவன் வாழ்க நீடூழியென உளமாற பரிமாற உலகுடை  நிலமனைத்தும் வளவாழ்வு இனி பெறுக என்றிட வா !  பைந்தமிழர் இனம் சிறக்க பட்டொளி கொடி பறக்க வான் மகனே என்புருக்கி எமை வாழ வைக்க வந்துதித்தான். இதயம் இயங்கும் வரை இயலும் காலம் வரை  இறுதிமுச்சோடும் உறுதியிருக்கும் வரை புதையல் அவனாக பூமகள் புன்னகைக்க இம்மை முழுமையும் செம்மையாக்கிடவே  நம்மை காக்கின்ற நன்மை பொழி மாரியென தன்னுயிரை தாரை வார்க்கும் பைம்பொன் பெட்டகமாய் பன்னாட்டிற்கமைவானே. இதை சிவனாரும் அறிவுறுத்த சித்தர்களும் அறிவாரே. சிற்றின்பமுற்றோனும் சிவனெறியை விட்டோனும் கருவமுற கற்றறிந்து காமன் கணை பட்டோனும் சினம...

பாகம்127, 128 & 129 : பின்னுதித்து பேருதவி புரிந்திடவே அன்னையுடை தங்கையொரு அடிப்படை அன்பகமாய் பொறுப்பேற்று தமிழீன்ற தென்னிலத்து தேன்மொழியிற் நற்குமரி நாமமுடை சுண்டுவிரலொப்ப சுண்டெலி உடலொப்ப சுந்தரி அழகொப்ப சுறுசுறுப்பில் எறும்பொத்த விண்டு மகளொப்ப விரல் தழுவும் சங்கொப்ப வந்து உதித்தவளாய் வானவனை வளர்ப்பதற்கும் மென்மையினும் மேன்மையுடன் மேதினியே திகைப்பதற்கும் அன்னையினும் சிறப்புற்று அம்பை போற் கிடைப்பாளே.

Image
  பாகம் 127  எங்கு காண்பினும் இதயபூர்வமாய் தயக்கம் தளர்த்தியே தயை கூர் எம் தங்கரதமவன் இத்தகைசால் உயிர் மேல் கருணை கொள்வதை கண்டு பகருவேன். அது ஆளைப் பார்த்ததும் அகம் குளிர்ந்திட வாலை வீசியே வஞ்சமிலாமலே வாஞ்சை கொண்டதோர்  நன்னெஞ்சமுற்றிடும் ஞாளிப்படைகளை நடக்கும் இடமெல்லாம் நேசம் செலுத்தியே நெஞ்சை நிமிர்த்திடும் சிங்கத்தழிழ்மகன் செவ்வடி தாங்கிடும் இல்ல வளாகத்துள் எண்ணெட்டு வைரவருள் வெறும் ஐவர் வாழ்க்கையை அங்கு கண்டிட்டேன். அருட்பாண்டவருற்ற வீரத்தில் ஐம்பெரும் பூதங்கள் பெற்ற கோலத்தில் அவனடி பூமியில் ஒன்று சென்றபின் ஒன்று வந்திடும் கால இடைவெளி விட்டுவிட்டுத்தான் காக்கும் தேவர்கள் பூத்து உதிர்ந்ததை காலந்தோறும் யான் கண்ட காட்சியை ஞானக்கண் வழி இங்கு தருகிறேன்.  மல்லனாகவே மறம் வீழா வல்லவன் வீட்டை வலம் வந்த காவல் தெய்வத்துள் ஒன்று மட்டும் காலன் அழைத்த  நாள் வரைக்கும் கடமை பூண்டு பணியாற்றி அரவம் ஒன்றையும் விடாது அஞ்சா நெஞ்சுடன் போர்புரிந்து வருடம் பத்தாய் வாழ்ந்த பின்னர் கொற்றவை குலமகன் முற்றத்தில் குருதி சுருங்கி வயதாகி இறுதி பயணம் கொண்டதுதான் உள்ளம் உள்ள நாள் வரைக்கும் உள...

பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.

Image
பாகம்124   பாகம் 124   🌸  கண்ணுக்ககப்படா  அணுவுக்குள் கருவானாய். உன் காலடியில் கரம் குவிக்க காலமெலாம் தருவானாய். உள்ளது உள்ளபடி ஒப்பற்ற வடிவாகி உண்மையே உருவானாய். உன் ஒப்புதல்க்கு சிரம் தாழ்த்தி உனை துதித்தேன் வாக்காவாய்.  ஒப்பரியோன் அவன் உள்ளங்கையுள்ளில் ஓம்கார முத்திரைதான் கைத்தலம் வலதில் கதிர் வீசி கண்கவர அப்பெருமாள் அனைத்தும் ஒரு சேரும் வார்ப்பாய் ஒன்பது பிறவிகளின் உயரியதோர் நோக்காய் ஒருவனே தாங்கி வித்தகன் வடிவில் விரிவதை சித்தர்கள் மட்டுமே சிந்தனையுன்றி சிதறாதறிவர்.  உன் சேவடியறியா வஞ்சக வைதிகர் வரம்பிலா நிந்தனை செய்வர். வானவர் அவனை வாழ்த்தி வணங்கி வந்தனை செய்வர். சிவபக்தரும் புரியா புதிராய் பத்தாம் பிறப்போ பாவைப்பொன்னிதழ் வழி வித்தாய் விளைந்து முத்தாய் ஒளிரும் முற்றுமுணர்ந்த சித்தை சுமந்து  முலவராணைக்கிணைங்கியே   முத்தமிழ் சொத்தை சுமந்து மூதறிவு சூத்திரமறிந்து சுடரொளி பாத்திரமேற்று பங்கய இதழ் குறி நெற்றியில் தாங்கி பாராள வருவானே. சக்கரதாரியாய் சங்கை வலக்கையுள்ளில் தாங்கி எங்கும் நிறைந்தோன் இங்கோர் உடலுடன் இறுதிப்பிறப்பெடுத்து பொங்கும் ...