பாகம் 133 மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே.
பாகம் 133 அகிலத்தின் அன்பனென அருளாளன் பெயருற்று அறம் மாறா ஏழ்முனிக்குள் அவனொரு ஞானியுமாய் முடி துறந்த அரசனவன் முற்றுணர்ந்த முனிவனுமாய் அரம்பையுடன் அன்றிணைந்து அழகுடை பூமழலை அலரக் காரணமாய் மாகவிஞன் காவியத்தில் மறதியுறம் சாபமுற்ற நீள் கூந்தல் நேரிழைக்கு நெறிபிறழா தாதையவன் முன் வந்த முதுகுத்தண்டுவடம் சிதைந்த முடவனொருவன் முறை தவறி காமன் கண்ணாயிரம் கரமோங்கும் உலகுறைய உடன்பட்டும் உள்ளுறைய விடாது உம்பர்கோன் மறுத்ததனால் ஆரம்பையருலகமொன்றை அவனுக்காய் அமைத்ததொரு பிரமமுனியை பெயர் சொலாது நீயறிவாய் ! அம்மாமுனிவன் அருமகள் மறவன் குலம் தோன்றி மாலனுறங்கும் மண்டபம் மேற்கே மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது கொலுவுற்று கொள்கையால் ...