பாகம் 124, 125 & 126ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப்பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே.
பாகம்124 பாகம் 124 🌸 கண்ணுக்ககப்படா அணுவுக்குள் கருவானாய். உன் காலடியில் கரம் குவிக்க காலமெலாம் தருவானாய். உள்ளது உள்ளபடி ஒப்பற்ற வடிவாகி உண்மையே உருவானாய். உன் ஒப்புதல்க்கு சிரம் தாழ்த்தி உனை துதித்தேன் வாக்காவாய். ஒப்பரியோன் அவன் உள்ளங்கையுள்ளில் ஓம்கார முத்திரைதான் கைத்தலம் வலதில் கதிர் வீசி கண்கவர அப்பெருமாள் அனைத்தும் ஒரு சேரும் வார்ப்பாய் ஒன்பது பிறவிகளின் உயரியதோர் நோக்காய் ஒருவனே தாங்கி வித்தகன் வடிவில் விரிவதை சித்தர்கள் மட்டுமே சிந்தனையுன்றி சிதறாதறிவர். உன் சேவடியறியா வஞ்சக வைதிகர் வரம்பிலா நிந்தனை செய்வர். வானவர் அவனை வாழ்த்தி வணங்கி வந்தனை செய்வர். சிவபக்தரும் புரியா புதிராய் பத்தாம் பிறப்போ பாவைப்பொன்னிதழ் வழி வித்தாய் விளைந்து முத்தாய் ஒளிரும் முற்றுமுணர்ந்த சித்தை சுமந்து முலவராணைக்கிணைங்கியே முத்தமிழ் சொத்தை சுமந்து மூதறிவு சூத்திரமறிந்து சுடரொளி பாத்திரமேற்று பங்கய இதழ் குறி நெற்றியில் தாங்கி பாராள வருவானே. சக்கரதாரியாய் சங்கை வலக்கையுள்ளில் தாங்கி எங்கும் நிறைந்தோன் இங்கோர் உடலுடன் இறுதிப்பிறப்பெடுத்து பொங்கும் ...