பாகம் 43, 44 & 45
பாகம் 43💗
உறுபசியொடு ஊனுடலை விழுங்கிடவெறிநிலம் வருமே. கொலை நடுங்கி மாந்தர் கோடி மண்ணுள் ஒடுங்கி மீளாத்துயில் கொள்ளும் கரும்பிறை நாளென்பதை காணாதாரறிந்திடவே மறமோதுமுன் அறம்பாடி அருள்வாக்கு தந்தேனே. அதன்பின் பிறைபூத்த மூன்றாம் நாள் புவியோர் வேண்டுதல்க்கிணங்க பின்னவதாரமாய் மாறுதலை தந்தாறுதலை தருவானாறுதலையான் வேள் ஆறுமுகனொளிர்வானே.
சேயோன் வாழ்வு தீதுறக்கண்டு அகனமர்ந்தோர் தென்முனைக்குள் வாடையாக புலன் பெயர்ந்து பண்டே வந்த மாயேன் மானிட தீயோர் வகையினமழியுமே.
ஒளிகக்கும் கண்டமொன்று ஓசையின்றி வானிருந்து வந்து மோதி குழிபறிக்கும் கோளமாக பூமியிலே உயிர்பறிக்கும் கோடியாக.
முன்னம் கொட்டமடித்து கொண்டாடிய இருளர்கூட்டம் பின்னம் கொலைநடுங்கி மாளும் மாட்சியை நீட்சியாய் கண்டேனே.
அவ் விண்மீன் பூவிமேல் வீழ்தெரித்தடங்கிய பின் எம் கண்மீனாய் இவனெழக் கண்டேனே பரம்பொருளே. கொதித்தவரடங்கினரே கூக்குரலிட்டொடுங்கினரே.
பதிகள் மிதந்த வண்ணம் பார் தாங்கா புயல் மாரி சில்லெறிந்து தள்ள கரை தாங்கா தடம் புரண்டு ஓடு புனலனைத்தும் கொல்ல நெறிபிறழும் கற்பிலா பெண் போலே ஊர்மேய்ந்து உயிர் பறிக்கும் வெள்ளத்தை யாம் என் சொல்வேன் பரம்பொருளே.
நறுவேள் வருகையினாற் நல்லோரனைவரும் உறுவள நாட்டிற்குள் உயிர்த்தாரே. கொடுநோய் தாக்கா பயிராக தளிர்த்தாரே என கண்டேனே ஒளிர்பிறை தலையோனே உடுக்கையை ஒருகையாற் உரக்க அடிக்கும் ஒப்பிலா அறனே.
நேர்கொண்ட பார்வையுடன் நெறிபிறழா நீதிசெய்து அறவோன் புவியாள வருவதற்கு புண்ணியம்யாம் செய்தோமென புகலவந்தேன்பரம்பொருளே. விதை விதைத்து வேரிறக்கி கற்பகம் போல் ஒளிர்வானே. கற்புக்கடம் பூண்டு கடலோரம் காட்சிதரும் மாட்சிமிகு எம் திருத்தாயாம் தென்குமரி தயவாலே மன்னுயிரை காக்க மறு அவதாரமெடுக்கும் நிலம் மண்வளம் கொழிக்கும் நல் மார்த்தாண்டன் பொன்நிலமே. ஆங்கே மறைவாழ்த்தும் மைந்தனாக மன்னவர்க்கு மன்னனாக இறைமகனருளாலே மலைநீர் உருகிவர உரகங்கள் உறவாடும் ஓடைக்கருகினிலே கருவாகி உருவாகி நிறைஞானியர் நெஞ்சினிக்க கறைகாணா காஞ்சனமாய் கன்னியர்கண் மயக்கமுற பொன்போல் வளர்வானே. திடீர் மின்னலென எழுவானே. நிலைகுலையா நெஞ்செடுத்து நிலத்தில்எழும் குறைஅகற்றி நெஞ்சார நிறைபுகுத்தி செல்வானென்பதனை பறையறைந்து பகராமல் நீயறிவாய் பாரெல்லாம் கண்ணமைத்து பக்கமெல்லாம் செவிபதித்து நாளும் சேதிபெறும் நற்பொருளின் உறைவிடமே இவ்வுண்மை பலரறிய இன்னிசையில் இயம்பினேனே எமையாளும் பரம்பொருளே.
பாகம் 44💗
முத்துக்குளிப்போர் நிலமதிற் முளைத்த முரணரும் கொடும் சொத்து குவிக்கும் அவா கொண்டோருமிணைந்திவனை
மூர்ச்சையாக்க முக்குலங்களணி சேர்ந்து முக்குவரென்பதனை முன்கூட்டி யாமறிந்ததனை கண்கொத்திப் பாம்பாய் நீ கண்டாய் காக்கும் அறனே. இக்கொடியோர் குருதி வழியும் கூராயுதமுடன் கொலைக்களம் இறங்கினாலும் ஐயனிவன் நிழல்கூட காயப்படாதென்பதனை நீயறிய யாமறிவோம் பரம்பொருளே.
மண் புழுக்கள் ஒன்றுகூடி மலை புரட்ட புறப்பட்டாலதன் சிறு சிலை கூட அசைந்திடுமோ. சீர்வேளொத்த அருளாளனிவன் சிரம் பெயர்க்க இயலுமோ சொல். கனல் பட்டெரிந்து விழும் விட்டிலென கருகிடுமே கயவர்கூட்டம்.
பொன்னீட்டும் பொன்னாடை பின்னியவரிவன் தலை தறிக்கும் சதி வலையை பின்னுவரே. தயை கொன்ற கொங்கர் வாழ் திருப்பூரணி துகில் தறியரைத் தடுத்ததனால் வேந்தனிவன் தலை தறிக்க இயலாமல் தலைதெறிக்க மாய்ந்தனரே தறுதலைகள்.
நெஞ்சீரமழிந்த நிலைகெட்ட இழியோர் எண்ணிலா பாவியர் இணைந்தொன்றாய் ஐயனிவனைச் சூழ்ந்தணைந்தே வருவதை உன்னொளிகண்ணால் எம்னுள்ளில் கண்டேனய்யா இடும்பை அகற்றும் ஈடிலா பரம்பொருளே.
ஆழி வேடுவர் ஆய் தொழில் இடையர் அறமறியா பறையர் தற்குறியாய் கற்பகமேறும் கொடுங்கண்ணினத்தர் செக்காயும் மருள் குடியருடன் நெஞ்சுறைந்த ஈழத்தீயோரென எண்ணிலாரிணைந்தெம்மையனை முடிக்க அடுநிதி பெற்றனரே.
இதை மனம் கொன்ற மன்னவனும் மதமூட்டி அரசாளும் மையத்து வெய்யரும் நன்கறிவர். இவன் கதை முடிக்கக் கனாக் காணும் கயவர்க்குதவும் ஓருடை காநிரையும் நன்குணர்வர்.
சிறுத்தையை சிற்றெலிகள் முற்றுகையிட்டால் முடங்குவது சிற்றினத்தின் மறுமையல்லவா. சோதிப்பது சிவனாரின் மகவையல்லவா. பரத்தையர் பத்தினியை சபித்திட்டால் பாதிப்பு எவர்க்கென்று பகுத்தறியா பாவியர்கள் பெருகியதை சிரத்தையாய் தேவநேயன் தெரிந்திட்டான். பொல்லாவிகள் புடைசூழ்ந்து முடக்கிட தென்முனை தேவத்தாயை வணங்கியே தன் வாழ்வை சமர்ப்பித்தான்.
பாகம் 45 💗
வலக்கை விரிந்தால் செவ்வேள் மஞ்ஞை பூந்தலை மீது மரைமலர் ஒளிரக்கண்டேன். அவ்வெழில் மயில் அலகு பெருவிரலடுத்த உதிரன் மேட்டை ஒற்றிடக்கண்டேன். மயூர மேனியில் மலைமகள் சூலம் புகர் மதி மேட்டில் தலைகீழ் கவிழ்ந்ததைக்கண்டேன். அதன் மேலமைந்த அந்தணன் மேட்டில் அம்பை ஆயுதம் மீண்டும் கண்டேன். அவ்வாயுதம் மீதொரு மோதிர வளையம் மேதையின் குறியாய் சுட்டும் விரல்கீழ் வெட்டென கண்டேன்.
அறுமுனை உடுமீன் மொழியும் சரவணபவ எனும் அழகன் கோணம் நடுவினிற் உள்ளதை நல்லோரறிய நவின்றேன். மாயோனூதிய குழலிசையன்ன மன்னுயிர் மயங்க தேனொலி எழுப்பும் தெள்ளிதழ் பூவாய் நறுமணம் வீச திருமெய் தன்னை தீபமாய் நிமிர்த்தி தீரன் வருவதை நானே கண்டேன்.
வடக்கர் வணங்கும் ஒம் எனும் லிபியை வலக்கை உள்ளில் வெள்ளிக்கெதிரே கண்டேன். அதை சற்றே சாய்த்தால் துருக்கர் முத்திரை நபிமார் துதிக்கும் நல்லோர் மந்திரம் என்பேன்.
மயிலும் சேவல்போற் சிற்சில நேரம் ஆவலாய் பார்க்க சேயோன் கையென எண்ணும் ரேகையும் கைக்குள் மின்னும். அது சேவலல்ல மயிலேயாகும். சேவலின் கண்டம் சின்னம்.
இவன் மெய்யினில் இணைந்த இரு முளரிகள் நடுவே மாதவம் புரியும் சாம்பன் உடுக்கைகள் உறுமாதுறங்கிட காணுமே.
கரமலர் இடதில் கருடன் சிரம் தான் பரிதியில் பதிந்து பின்வால் தொடுவது செவ்வாய் கீழடி ஆகுமே. அதன் சிறகொன்று செம்மீன் குருவிடை பதிந்திட பிறிதொன்று காரி குன்றில் இருந்திட கால்கள் சுங்கன் மதியிடை நிற்குமே. இவ்வரிபுள் நடுமெய் நந்துவாலானதே உண்மை. இத்தளிர்க்கைப் பூவில் மையம் கொண்ட எழிலரி சங்குடை நெஞ்சுள் பெருமாள் சுழற்றும் ஆழிப் புள்ளியுள் வெற்றியை சாற்றும் வேல் முனை இருக்க வேலவன் கைப்பிடி ஆரல் பரப்பில் அழகாய் மிளிர்வதே மேன்மை. திருக்குந்தனூதிய பிரிதொருசங்கை அணிந்த புலவன் திடலை மீண்டும் பார்த்து வியந்தேன்.
அருள்தரு அரியமர் அரியணை செம்புள் மேனியின் பரப்பறிய பகர்வேன். அது மூவிரலுக்கொரு விரலகல மிருக்க அதன் மெய்யுள் உறங்கும் விது சங்குள் அஞ்சன் சக்கரமுருளுமென்பதை எம்போல் தெக்கண மாமுனி திருக்கண்ணறியுமே.
நல்லோர் எவரும் அறியா நெறியோன் தன்னை நாயோர் அறிவதுறுதியே. அத்தீயோர் வாழ்வும் இறுதியே ! நாடகமனைத்தும் நடுவனம் தன்னில் தவத்தை சுவைப்போர் கண்மூடி கண்திறந்தறிவரே.
பொன்னும் புகழும் மண்ணும் துறந்து மலர்விழி மறந்தே அமரும் நிறை ஞானியர் உணர்வர் எளிதிலே.
Comments
Post a Comment